🛑 திருப்பூரில் அனுமதியின்றி சிலிண்டர் பதுக்கு – 200க்கும் மேற்பட்டவை பறிமுதல்.
📍திருப்பூர்: சாமுண்டிபுரம் அருகே தாய் மூகாம்பிகை நகரில் அனுமதியின்றி வீட்டு மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.
அதிகாரிகள் திடீர் சோதனையில் 200க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவை விநாயகா கேஸ் ஏஜென்சிக்கு சொந்தமானது தெரியவந்தது.
உரிமையாளர் மோகனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு நேரத்தில் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
