அடிப்படையில் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள ஒரு சிலர் பேசுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது இல்லை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு
இன்றைக்கு எடப்பாடியாருக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை வீசுகிறது இன்றைக்கு மத்திய தலைமை தெள்ளத் தெளிவாக மக்களுக்கு அறிவித்திருக்கிறது தேசிய கட்சியான பாஜ கட்சி தலைமை தெளிவாக அறிவித்து இருக்கிறது , டெல்லிக்கு தலைமை மோடி தமிழ்நாட்டுக்கு தலைமை எடப்பாடியார் தலைமையிலே மகத்தான மாபெரும் வெற்றி கூட்டணி, வலிமையான கூட்டணி, இதுல யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, மக்களுக்கும் சந்தேகம் இல்லை, எங்களுக்கும் சந்தேகமில்லை, எல்லோருக்கும் சந்தேகம் இல்லை.ஆகவே சிலர் இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்ள, தாங்கள் இருப்பதை காட்டிக் கொள்ள கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலே கருத்து சொல்வதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
எடப்பாடியார் தலைமையில் தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலரும் ,எடப்பாடியார் தலைமையில் தான் மகத்தான கூட்டணி வெற்றி கூட்டணி வலிமையான கூட்டணி மெகா கூட்டணி இதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய எதிர்பார்ப்புஇதுதான்.குழப்பமான எந்தவிதமான கருத்து மாறுவேறுபாடுஇல்லை அதற்கான தேவையும் இல்லை அதற்கான விவாதம் தேவை இல்லை தெளிவாக இருக்கிறோம்.எடப்பாடியாரை முதலமைச்சராக முன்னிறுத்தி வாக்குகளை சேகரித்து மாபெரும் வெற்றி ஒரே இலக்கு, மதிமுக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும். ராமனாக எடப்பாடியாரை முன்னிறுத்தி திமுக என்கிற அசுரரை அந்த தீய சக்தியை வீழ்த்துகிறார். அந்த மகத்தான அம்பையை எழுதுவதற்கு காலம் கனிந்துவந்துவிட்டது கருத்துக்கு இதில் தடையில்லைஇதிலே எந்தவிதமான இடையூறும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள்
