தேனிமாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா திருமலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு 100 நாள் வேலை திட்ட பணிகள் வழங்காமல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அலைக்கழிப்பதாகவும், ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள மற்ற ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டப் பணிகள் முறையாக நடைபெற்று வரும் நிலையில் தங்கள் ஊராட்சியில் மட்டும் 100 நாள் வேலை திட்ட பணிகள் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் தங்கள் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக திருமலாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் தேனி மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது

இதனால் ஆத்திரமடைந்த திருமலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகத்தை முற்றுவிட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அறையில் அமர்ந்து தங்களுக்கு 100 நாள் வேலை திட்ட பணியை வழங்க கோரி தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் . 100 நாள் வேலைத்திட்ட பணி வழங்கும் வரை இந்த தர்ணா போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பான சூழல் தற்போது நிலவி வருகிறது.