திருப்பூர் வீரபாண்டி அருகே கருப்பகவுண்டம் பாளையம் பகுதியில் ஜெகதீஷ் என்பவர் எஸ்.பி.பி டெக்ஸ்டைல்ஸ் என்ற பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் வழக்கம் போல தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் திடீர் தீ விபத்து காரணமாக உள்ளே இருந்த பனியன் துணிகள் இயந்திரங்கள் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில் திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கம் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் அருகில் இருந்த ஊற்றில் இருந்து தண்ணீர் எடுத்த அனைத்து வருகின்றனர்.