விழுப்புரத்திலுள்ள கடைகளுக்கு காரில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா பொருட்களை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை நகர போலீசார் கைது செய்து 180 கிலோ பான்மசாலா பொருட்கள் காரினை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் அருகேயுள்ள பழைய நகராட்சி பூங்கா அருகே நகர காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த சதீஷ் என்பவரை அழைத்து போலீசார் விசாரனை செய்தபோது முன்னுபின் முரனான பதிலை அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் சதீசை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரனை செய்ததில் பெங்களூருவிலிருந்து தடைசெய்யப்பட்ட பான்மசாலா புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்து விழுப்புரம் நகர பகுதியான மணி நகர், காந்தி நகர் பகுதியிலுள்ள கடைகளுக்கு சதிஷ், சத்தியநாராயணன் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட சத்ய நாராயணன், சதிஷ் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 2 லட்சம் மதிப்பிலான 180 கிலோ தடை செய்யப்பட்ட பானமசாலா மற்றும் காரினை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு உறுதுனையான இருந்த சதீஷ்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
