வெள்ளை நிறத்தொரு பூனை – அதன் உயிரை காத்திட்டர் வீரர்.
பொள்ளாச்சி அருகே இரண்டாவது மாடியில் சிக்கி தவித்த குட்டி பூனை மீட்பு
தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு

பொள்ளாச்சியை அடுத்த மகாலிங்கபுரம் பகுதியில் இருந்து தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு நேற்று ஒரு வினோத அழைப்பு வந்தது.மகாலிங்கபுரம் சி என் எஸ் அப்பார்ட்மெண்டில் பிறந்து சில வாரங்களை ஆன வெள்ளை நிறத்தொரு குட்டி பூனை தாயின்றி இரண்டாவது மாடியில் தவித்து வருவதாகவும்,அதன் உயிரை காப்பாற்ற வேண்டும் எனவும் அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாக ஆபத்து காலங்களில் மீட்க முடியாத நிலையில் தவிக்கும் மனிதர்கள், கிணற்றில் விழுந்த கால்நடைகள், வனவிலங்குகள் உள்ளிட்டவற்றை காப்பாற்ற வேண்டும் என பல்வேறு அழைப்புகளை சந்தித்த தீயணைப்புத் துறையினருக்கு குட்டி பூனையின் உயிரை காக்க வந்த அழைப்பு ஆச்சரியமாக இருந்தது இருந்தது.எனினும் உயிர் அனைத்தும் ஒன்றே என்ற சிந்தனையின் அடிப்படையில் களத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் மகாலிங்கபுரம் பகுதிக்கு சென்று பார்க்க போது தாயை விட்டு வழி தவறி வந்த வெள்ளை நிற குட்டி பூனை ஒன்று இரண்டாவது மாடியில் உள்ள லாப்டில் தப்பிக்க வழி இன்றி மாட்டியிருந்தது.இதனை அடுத்து ஏணி மூலம் மேலே சென்ற தீயணைப்பு வீரர்கள் பயந்த நிலையில் இருந்த குட்டி பூனையை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் விட்டனர்.பயத்தில் இருந்த குட்டி பூனையை ஆசுவாசப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் விட்டனர்.
தாயை விட்டு வழி தவறி வந்து இரண்டாவது மாடியில் சிக்கிக் கொண்ட குட்டி பூனையின் உயிரைக் காத்த தீயணைப்பு துறையினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
