மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் அருள்மிகு தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதர்சுவாமி கோவில் அமைந்துள்ளதுள்ளது.நவகிரகங்களில் செவ்வாய் தலமாகவும், முருக பெருமான் செல்வ முத்துக்குமார சுவாமியாக தனி சன்னிதியிலும், அருள்பாளிக்கின்றனர். இக்கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ திருவிழா கடந்த 2 ம்ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இவ்விழாவின் 7ம் நாளான இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக விநாயகர்,சுவாமி, அம்பாள், செல்வமுத்துக குமாரசுவாமி, அங்காரகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பஞ்ச மூர்த்திசுவாமிகள் எழுந்தருள சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்க திரளான பக்தர்கள் திருத்தேரினை இழுத்தனர் தொடர்ந்து நான்கு தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு வீதிகளின் வழியாக சென்று கோயில் நிலையை அடைந்தது.