திருச்சி மாவட்டம் மணப்பாரை பகுதியில் இருந்து திருப்பூர் எஸ் ஏ பி பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு நூல் கோன்களை ஏற்றி வந்த லாரி நள்ளிரவு நாச்சிபாளையம் பகுதியை கடக்கும் போது லாரிக்கு முன்னால் சென்று கொண்டு இருந்த இரு சக்கர வாகனம் திடீர் என நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் லாரியை இருசக்கர வாகன ஓட்டி மீது மோதாமல் தடுக்க வலது புறம் திருப்பிய நிலையில் லாரி வேகமாக சாலை சென்டர் மீடியனில் மோதி நின்றது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் பிரபு அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அஜாக்கிரதையாக இருசக்கர வாகனத்தை இயக்கிய நபர் குறித்து அவினாசிபாளையம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் லாரி முன்பக்கம் முழுமையாக சேதம் அடைந்தது.