செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை To திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டைனர் லாரி மூலம் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு மாடுகள் கடத்தப்படுவதாக கோரக்தல்அமைப்பின் மாநில தலைவர் ரகுராம் ஷர்மா அவர்கள் அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்

அதன் பேரில் நேற்று இரவு அச்சரப்பாக்கம் போலீசார் ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்பொழுது கண்டெய்னர் லாரியில் 33 கறவை பசு மாடுகளும் 6 எருமை மாடுகளும் கண்டெய்னர் லாரியில் கடத்தி வரபட்டதை அச்சுறுப்பாக்கம் போலீசார் மீட்டனர்

அப்பொழுது லாரியை சோதனை செய்ததில் மாடுகளுக்கு தண்ணீரோ தீவனமோ இல்லாமலும் காற்றோட்டம் இல்லாத வாகனத்தில் அடைத்து கடத்தப்பட்டது
39 மாடுகளை மீட்டனர்இந்தக் கடத்தல் சம்பந்தமாக லாரி உரிமையாளர் சம்சுதீன் லாரி ஓட்டுநர் சண்முக சுந்தரம்ஆகிய இதுவரை கைது செய்து காவல்துறையினர் இவர்கள் மீதுவழக்கு பதிவு செய்து உரியவிசாரணை நடத்தி வருகின்றனர்