திருப்பூர்..

திருப்பூரில் சீட்டு விளையாடி ஒரு லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்த நபர் தன்னை போல் யாரும் ஏமாந்து விடக்கூடாது என்று எச்சரிப்பதற்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.

திருப்பூர் மாவட்டம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி லலிதா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதிகள் இருவரும் அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனடியே கோபாலகிருஷ்ணன் சரியாக வேலைக்குச் செல்லாமல் தனியார் கிளம்புகளில் சீட்டு விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஊத்துக்குளி பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் சீட்டு விளையாடி ஒரு லட்சத்துக்கு மேல் பணத்தை இழந்துள்ளார் இதில் விரட்டி அடைந்த கோபாலகிருஷ்ணன் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். தான் கொண்டு வந்த கேனில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதனைப் பார்த்த ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினார். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தான் சீட்டு விளையாடி பணத்தை இழந்துவிட்டதாகவும் தன்னைப்போல் யாரும் சீட்டு விளையாடி பணத்தை இழந்து விடக்கூடாது என்பதை எச்சரிப்பதற்காகவே தீக்குளிக்க வந்ததாக தெரிவித்துள்ளார் இதனை தொடர்ந்து போலீசார் அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர் பரபரப்பு ஏற்பட்டது.