கும்பகோணம் மாவட்டம் மாமாங் குளம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி மாலா (36).சுஜித்குமார்(11) என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருண்குமார் இறந்துவிட்டார். இதனால் மாலா தனது மகனை அழைத்துக் கொண்டு திருப்பூர் மங்கலம் ரோடு கோழி பண்ணை அருகே உள்ள கே.டி. கே.தோட்டம் பகுதியில் குடியிருந்து பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகனுக்கு உணவில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அவரும் விஷத்தை குடித்தார்.
சிறிது நேரத்தில் இருவரும் வீட்டில் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாலாவின் உடல் நிலை மிகவும் மோசமானதாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சுஜித் குமாருக்கு திருப்பூர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருப்பூர் மத்திய பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து
மாலா எதற்காக தற்கொலை செய்தார். குடும்ப வறுமை காரணமாக அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாலாவின் உடல் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள நிலையில் இதுவரை உறவினர்கள் யாரும் வராததால் அவர்களது உறவினர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.