ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கொத்தமங்கலம், தாண்டாம்பாளையம், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள முக்கிய நகங்களுக்கும் கோவை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தொடர் முகூர்த்தம் மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்து, சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து மல்லிகைப்பூ கிலோ 4740 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த சில தினங்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 2955 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப் பூ ஒரே நாளில், 1785 ரூபாய் உயர்ந்து, இன்று 4740-க்கு விற்பனையானது

முல்லை 700 ரூபாய் உயர்ந்து, 2840 ரூபாய்க்கு விற்பனையானது. காக்கடா 1375 ரூபாயாக உயர்ந்தது. கனகாம்பரம் 600 ரூபாய்க்கு விற்ற நிலையில், 300 ரூபாய் உயர்ந்து இன்று 900 ரூபாய்க்கு விற்பனையானது. பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.