என்டிஆர் மாவட்டத்தின் ஜக்கய்யாபேட்டை நகரில் கூலி தொழிலாளர்கள் மீது மதுபோதையில் கார் மோதி விபத்து

ஆந்திர மாநிலம்
என்டிஆர் மாவட்டத்தின் ஜக்கய்யாபேட்டை செருவுகட்டா வீதியில்
கூலி தொழிலாளர்கள் பணிக்கு செல்ல நின்று கொண்டிருந்தனர். அப்போது ​​வேகமாக வந்த ஒரு கார் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக முதலுதவிக்காக ஜக்கய்யாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பான சிசிடிவி கேமராக்களில் பதிவாகிய காட்சிகளின் அடிப்படையில் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரை ஓட்டி வந்தவர் மது அருந்தியிருந்ததாக பொது மக்கள் கூறினர். தற்போது கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் டிரைவஎ தப்பி ஓடிவிட்டார். ஜக்கய்யாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எம்.எல்.ஏ ஸ்ரீராம் ராஜகோபால் அரசு மருத்துவமனைக்கு வந்து, அவர்களைப் பார்வையிட்டு, சம்பவ விவரங்களை கேட்டறிந்து மேல் சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்புமாறு மருத்துவரிடம் அறிவுறுத்தினார்.