பாமன் குந்துகால் பகுதியில் இருந்து இன்னாசி முத்து என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் ஏழு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை இன்னாசி முத்துக்கு சொந்தமான நாட்டுப் படகு மீது மோதி படகை சேதப்படுத்தி படகில் இருந்த ஏழு மீனவர்களை தாக்கி வலையை வெட்டி கடலில் வீசி விரட்டி அடித்துள்ளனர். இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் இன்று காலை கரை வந்தனர். இலங்கை கடற்படை மோதி சேதப்படுத்தியதில் ரூபாய் இரண்டு லட்சமும் முதல் 4 லட்சம் வரை செலவாகும் என மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.