நாளை காலை பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்க பகுதிக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஒப்பந்தத்தின்படி ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி நீரும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என, 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு மழைப்பொழிவு காரணமாக சென்னை குடிநீர் வழங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் உள்ளிட்ட ஐந்து ஏரிகளில் போதிய அளவு நீர் இருந்ததால் முன்கூட்டியே இரண்டாம் கட்ட கால அளவுக்கு கிருஷ்ணா நதி நீர் சென்னை குடிநீர் தேவைக்காக பெற முடியவில்லை
இந்நிலையில் கோடை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் வெகுவாக நீர் இருப்பு குறைந்து வருவதால்
ஜனவரி முதல் ஏப்ரல் வரை வழங்க வேண்டிய இரண்டாம் கட்ட 4 டி.எம்.சி கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும் எனக் கோரி தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர நீர்பாசனத்துறை அதிகாரிகளுக்கு கடந்த மாதம் கடிதம் எழுதிருந்தனர்.
அதன்பேரில் கடந்த 24 ந் தேதி கண்டலேறு அணையில் கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு முதல் கட்டமாக 500 கன அடி விதம் சென்னை குடிநீருக்காக
திறக்கப்பட்டது.
பின்னர் 500 கன அடி 800 கன அடியாக உயர்த்தப்பட்ட நீரானது
152 கிலோ மீட்டர் தூரம் பயணித்து
இன்றைய தினம் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜீரோ பாயிண்டுக்கு 60 கன அடி விதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
பின்னர் அந்த நீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தேக்கி வைத்து சென்னை குடிநீருக்காக பயன்படுத்தப்பட உள்ளது,
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகளில் கிருஷ்ணா நீர் சேமித்து வைக்கப்பட்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்த 5 ஏரிகளின் மொத்தகொள்ளளவு 11.757 டிஎம்சி ஆகும் தற்போது 8.765 டி.எம்.சி
நீர் இருப்பு உள்ளது இது 74.55 சதவீதம் இருந்து வருகிறது,
சென்னை குடிநீர் தேவைக்கு போதிய நீர் இருப்பு இருப்பதால் கோடை காலத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படாது என தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்,