மொபைல் செயலி மூலம் மாரடைப்பை சில வினாடிகளில் கண்டறியும் புது செயலியை 14 வயது கொண்ட என்.ஆர்.ஐ மாணவர் சித்தார்த் நந்தியாலா கண்டுபிடித்துள்ளார். டல்லாஸை சேர்ந்த இளம் ஏ.ஐ. ஆர்வலர் சித்தார்த் நந்தியாலா, 96 சதவீதத்திற்க்கும் மேற்பட்ட துல்லியத்துடன் செயல்படும் ஒரு செயலியை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் இந்தியா வந்துள்ள சித்தார்த்
முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அமராவதியில் தலைமை
தலைமை செயலகத்தில் ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்திய குமார் யாதவ் தலைமையில் சந்தித்தார். இதில் துணை முதல்வர் பவன் கல்யாண் அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த சந்திப்பின்போது, சிறிய வயதிலேயே செய்த இந்த சாதனைக்கு பாராட்டு தெரிவித்ததோடு, அவரது எதிர்காலத்திற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
நந்தியாலா கண்டுபிடித்த மொலைப் செயலி பெயர் சிர்கடியன் ஏ.ஐ. ( Circadian AI. ) இது ஸ்மார்ட்போன் மூலம் இதய துடிப்பு ஒலிகளை பதிவு செய்து, ஆரம்பகட்ட இருதய நோய்களை கண்டறியும் செயல்பாடு கொண்டது. இதை அமெரிக்காவில் 15,000க்கும் அதிகமான நோயாளிகள் மற்றும் இந்தியாவில் ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு மருத்துவமனையில் 700 நோயாளிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் 96%க்கும் மேற்பட்ட துல்லியத்துடன் முடிவுகளை வழங்கும் என ஆந்திர முதல்வர் தன்னுடைய எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
14 வயது சிறுவன் சித்தார்த் இருதய நோய்களை கண்டறியும் செயல்முறையை எளிதாக்கியுள்ளார்.
சித்தார்த் தந்தையான மகேஷ், ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் தனது குடும்பத்துடன் 2010-ஆம் ஆண்டு அமெரிக்கா குடிபெயர்ந்தார். அங்கு
டல்லாசில் இளம் ஏஐ ஆர்வலராக மொபைல் செயலியை கண்டுபிடித்து மாரடைப்பை சில வினாடிகளில் கண்டுபிடிக்கும் செயலியை உருவாக்கிய சித்தார்த்தை சந்திப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரகல் மற்றும் ஏ.ஆர்.எம். நிறுவனங்களில் உலகின் முன்னணி ஏ.ஐ. சான்றிதழை இந்த ஆப் பெற்றுள்ளது. அவருடைய இந்த செயலி இருதய நோய்களை சில விநாடிகளில் கண்டறியும் என்பதால், இது மருத்துவத் துறையின் முக்கிய முன்னேற்றமாக இருக்கிறது.
சித்தார்த்தின் அசாதாரண திறமை மற்றும் மனிதகுலத்தின் நலனுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இவ்வளவு இளம் வயதில், அவர் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம். சுகாதார தொழில்நுட்பத்தின் மீதான அவரது ஆர்வத்தைத் தொடர நான் அவரை முழு மனதுடன் ஊக்குவிக்கிறேன், மேலும் அவரது அனைத்து முயற்சிகளிலும் எங்கள் முழு ஆதரவையும் அவருக்கும் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன் என பதிவு செய்துள்ளார்.