

சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மனைவி சுப்புலட்சுமி. நேற்று முன்தினம் இரவு ஸ்கூட்டரில் பல்லடம் வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து கிருஷ்ணகுமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அய்யம்பாளையம் பிரிவில் பல்லடம் வழியாக கோவை நோக்கி சென்ற கார் முன்னால் சென்ற பைக் மற்றும் ஸ்கூட்டர் மீது மோதியது.
இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கிருஷ்ணகுமார் காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஸ்கூட்டரில் இருந்து தூக்கி எறியப்பட்ட சுப்புலட்சுமி காரின் முன் பகுதியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட இவரது உடல் கே.என் புரம் நால்ரோடு அருகே விழுந்தது.
இந்த விபத்தை தொடர்ந்து நிற்காமல் சென்ற காரை காரணம்பேட்டை செக்போஸ் பகுதியில் பொதுமக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரை ஓட்டி வந்த சோமனூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் சதீஷ்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உளளது.