குமரி மாவட்டம்
தென்தாமரைகுளம் அருகே உள்ள சோட்டப்பணிக்கன்
தேரிவிளையை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 67). இவர் அகஸ் தீஸ்வரம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் (கார்மல் மாதா) காவலாளி யாக வேலை செய்து வந்தார்.இவர் இரவு பணியில் இருந்தபோது பள்ளி வளாகத்தை சுற்றி வந்தார். அப்போது இருட்டில் நிலை தடுமாறி அங்குள்ள கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த அவரது மகளும், மருமகனும் அங்கு வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சந்திரசேகர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.