கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அடுத்த கூசனப்பள்ளியை சேர்ந்த ராஜூ (43) என்பவர் வீட்டின் பின்புறம் செம்மரக்கட்டைகள் பதுக்கி உள்ளதாக ஒசூர் ஏஎஸ்பி அக்க்ஷய் அனில் வாக்கரேவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து ஏஎஸ்பி உத்திரவின் பேரில் பாகலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு ராஜூ என்பவர் வீட்டின்பின்புறம் பதுக்கி வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 708 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, ஒசூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த தலைமறைவாக உள்ள ராஜூவை போலீஸாரும். வனத்துறையினரும் தேடிவருகின்றனர்