திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர் சந்திப்பு.. 2026 தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான கலந்தாய்வு கூட்டம் இது.தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி வருகிறேன்.
மயிலாடுதுறையில் இரட்டை கொலை நடந்தது முன்விரோதம் என காவல்துறை சொல்கிறது. அந்த முன் விரோதத்திற்கு என்ன காரணம் என்பதை சொல்ல வேண்டும் அதற்கு இந்த கள்ளச்சாராயம் தான் காரணமாக இருந்திருக்கிறது. ஒரு குற்றத்தை மறைக்க இந்த அரசு முயற்சிக்கிறது. குற்றத்தை தடுக்காமல் குற்றத்தை மறைக்கும் முயற்சியில் தான் இந்த அரசு ஈடுபடுகிறது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் திருப்பரங்குன்ற வழிபாட்டு பிரச்சனை என அனைத்து இடங்களிலும் அந்தப் பிரச்சனையை நேரடியாக கையாள்வதை அரசு தவிர்க்கிறது. மயிலாடுதுறை சம்பவத்திற்கு அரசு பொறுப்பேற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், திசை திருப்பும் செயலை காவல்துறை மேற்கொள்ளக்கூடாது.
திருப்பூரில் தெரு நாய்களால் கால்நடைகள் உயிர் இழக்கின்றன. கடந்த ஆறு மாத காலத்தில் 900 ஆடுகளை தெரு நாய்கள் கடித்து கொன்று இருக்கின்றன. இறந்த ஆடுகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்..திராவிட மாடல் ஆட்சியில் இழப்பீடு வழங்காமல் போராடும் விவசாயிகளை கைது செய்கின்றனர்.
அவர்களுக்கு இதுதான் நியாயம்,
அவிநாசியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்று்வரும் 4 மாவட்ட நாதக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில், தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்து தனியாக அறைக்குள் சீமான் கலந்தாய்வு நடத்தி வருகிறார்.கலந்தாய்வில் பங்கேற்கும் நிர்வாகிகள் செல்போன் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை.