திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 6 ஆம் ஆண்டு அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க விழா குழுவினர் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது வருகிறது. இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.
சுமார் 800 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர்.தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் , திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மாடுபிடி வீரர்களுக்கான உறுதிமொழியை படித்து அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.1000த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.